உலகம் எங்கள் குடும்பம் என்று நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் மோடி முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலளித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுடன் தென்னாப்பிரிக்காவில் தரையிறங்கிய விமானத்தின் படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டார். அதில் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தது” என்று பதிவிட்டிருந்தார்.
Glad to see your affection towards India. 🙂
We believe that the world is our family and want to play our role in strengthening the fight against COVID-19. https://t.co/zwpB3CNxLG
— Narendra Modi (@narendramodi) February 3, 2021
இந்தப் பதிவுக்கு தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், “இந்தியாவின் தாராள மனப்பான்மையும் கருணையும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வளர்கிறது. பிரியமான நாடு” என்று பதிலளித்திருந்தார்.
இதையடுத்து கெவின் பீட்டர்சனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “இந்தியா மீதான உங்கள் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உலகம் எங்கள் குடும்பம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் எங்கள் பங்கை வகிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.