’சையத் முஷ்டாக் அலி’ கோப்பையை தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி வென்றதையடுத்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 38 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் தமிழக அணி மோதியது. அதில், குஜராத்தை வீழ்த்தி தமிழக அணி வெற்றி பெற்றது. இதனை பாராட்டி நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”“சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றியானது நம் தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்களின் திறனையும், அணியின் ஆழத்தையும் வெளிபடுத்தியுள்ளது. இந்த அபாரமான சாதனையை கண்டு பெருமை கொள்கிறேன். ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. ஹேட்ஸ் ஆஃப் தினேஷ் கார்த்திக் அண்ணா. நீங்கள் தான் அசலான மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்று புகழ்ந்துள்ளார்.
Our title triumph in the #SMAT, is a glowing endorsement of the talent pool and depth in Tamil Nadu cricket! Absolutely proud of this incredible achievement. Amazing team effort and hats off to the legend @DineshKarthik Anna! True Master the Blaster pic.twitter.com/fE8WZ5hRhI
— Natarajan (@Natarajan_91) February 3, 2021
அவரது பதிவிற்கு பதிலளித்துள்ள தினேஷ் கார்த்திக் “நடராஜன் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள தினேஷ் கார்த்திக், “மிக்க நன்றி நட்டு, நீ எங்களுடன் இல்லாதது வருத்தமே. நீ அடைந்துள்ள உயரத்தை கண்டு நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். பல இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்க நீ இனி உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பாய்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thanks a lot nattu , we missed you not being with us this time . We are all proud and happy to see where you are and may you keep inspiring the younger generations to achieve their dreams ❤️? https://t.co/NayoHydfdx
— DK (@DineshKarthik) February 3, 2021