திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.