இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் சனிக்கிழமை அன்று எரிமலை வெடித்ததில் 5.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் சாம்பலை கக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏறக்குறைய சுமார் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் ஆக்டிவாக உள்ளன. இது உலகிலேயே மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம். 

இந்த மாகாணத்தில் உள்ள செமேரு மலையில் சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அங்குள்ள வீடுகளை சாம்பல் புகைகள்  சூழ்ந்துள்ளன. அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன. அந்த பகுதியில் இருந்து மக்களை அப்புறப்படுத்து குறித்து அதிகாரிகள் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. 

image

அதே போல இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளில் உள்ள எரிமலைகளும் ஆக்டிவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கமும் பதிவாகி இருந்தது. 

Courtesy: https://www.moneycontrol.com/news/world/indonesian-semeru-volcano-erupts-spews-ash-5kms-into-sky-6355401.html

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.