ஜி 7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்பே இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகின் ஏழு முன்னணி ஜனநாயக பொருளாதார நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா – மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுதான் ஜி7 என்று அழைக்கப்படுகிறது.

image

கொரோனா வைரஸ் தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து இந்த ஜி 7 மாநாடு விவாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிந்ததன் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்விற்கான தனது இந்திய பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜி 7 மாநாட்டுக்கு முன்பே நாட்டிற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைத் தவிர, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளும் உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.