சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய பிரபல பைக் திருடனை காரைக்காலில் வைத்து போலீசார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காரைக்கால் காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் விக்ரம்சாரபாய் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

image

அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த கலைகுமார் என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. மேலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புடைய 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

image

மேலும் இந்த பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்ட தகவலை சென்னை உள்ளிட்ட தமிழக பிறமாவட்ட காவல் துறைக்கு புதுச்சேரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.