முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அவதூறாகப் பேசியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் புகார் அளித்திருந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.