டிராக்டர் மீது லாரி மோதிய, பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள மதிரா நகரில், கடந்த சனிக்கிழமை இரவு 10.24 மணியளவில், டிராக்டரை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், அதனை ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஓரமாக ‘பார்க்’ செய்ய முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

லாரி மோதிய வேகத்தில் டிராக்டர் சுக்கு நூறாக நொறுங்கி நாலாபுறமும் சிதறியது. இதில் டிராக்டர் டிரைவர் ராமநர்சயா தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்தார் டிராக்டர் டிரைவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து மதிரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிவந்த லால் பஹ்சா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். லால் பஹ்சா மது போதையில் லாரி ஓட்டினாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.