கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

image

மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.