கோழியை கொன்று முட்டைகளை விழுங்கும் பாம்பு – சிசிடிவி காட்சி

கடலூரில் வீட்டில் இருந்த நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப்பாம்பு பிடிபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 மாதத்திற்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுப்பதும், இரை தேடி வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கம்மியம்பேட்டை பகுதியில் வீட்டில் இருந்த நாட்டுக் கோழியை கொன்று எட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து உயிரின ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்குவந்த அவர், அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பிடித்த சில நிமிடங்களில், விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக கக்கி அங்கிருந்து தப்ப முயற்சித்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.