இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயன்ற உறவினரை பெண் ஒருவர் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

image

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19). இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவரது உறவினரான அஜித்குமார்(25) கௌதமியை பின் தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

image

இந்நிலையில் அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்த கெளதமி நடந்தவற்றை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த கெளதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.