சிஏஏ போராட்டக் களத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் இன்று பாஜகவில் இணைந்த நிலையில், அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய போராட்டமானது இந்தாண்டு தொடக்க காலம் வரை நடைபெற்றது. குறிப்பாக டெல்லியின் ஷாஹீன் பாக்கில் பெண்கள் உட்பட ஏராளனமானோர் மிகத் தீவிரமாக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டக் களத்தில் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர் கபில் குஜ்ஜார். இவர் இன்று பாஜக வில் இணைந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தியாதாகவும், எதிர்ப்புகள் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Kapil Gurjar was part of a group of BSP workers who joined BJP today. We had no knowledge about his association with Shaheen Bagh issue: Sanjeev Sharma, President, Ghaziabad BJP https://t.co/ZWUZbd2rev
— ANI UP (@ANINewsUP) December 30, 2020
இது தொடர்பாக காசிபாத் பாஜக தலைவர் சஞ்சீவ் சர்மா ஏ.என.ஐ நிறுவனத்திற்கு பேசினார். இது குறித்து அவர் கூறும் போது, “ இன்று பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களில் கபில் குஜ்ஜார் ஒருவர். அவருக்கும் ஷாஹீன் பாக் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றார்.