திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தனது சொத்து விவரங்களை வெளியிடுவாரா? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, பல்வேறு விஷயங்க குறித்தும் பேசினார். அவர் கூறும்போது, “ துரைமுருகனுக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எவ்வளவு சொத்து இருந்தது? தற்போது எவ்வளவு சொத்து இருக்கிறது. துரைமுருகன் நடத்தி வரும் கல்லூரியின் சுவரைத் தட்டினால் ஊழல் ஊழல் என்றே கேட்கும். அவர் அதிமுகவை விமர்சிக்கிறார். அவரின் அன்றைய சொத்து விவரத்தையும், இன்றைய சொத்து விவரத்தையும் அவர் வெளியிடுவாரா? யார் ஊழல் செய்தது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.” என்றார்.

2ஜி ஸ்பெக்டரமில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்றது திமுக. ஆனால் நாங்கள் இ டெண்டர் முறையை பின்பற்றிவருகிறோம். ஒன்றரை வருடத்திற்கு முன்னரே டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், அண்மையில் அவர்கள் ஆளுநரை சந்தித்து ஊழல் புகார்கள் குறித்த அறிக்கையை அளித்தது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.”என்றார்.

கமல் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, “ அவருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும். 70 வயதுவரை நடித்துவிட்டு, ஓய்வு பெற்ற காலத்தில் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் நடிப்பில் வேண்டுமானால் பெரியவராக இருக்கலாம்.ஆனால் அரசியலில் ஜீரோ” என்றார்.

பாஜக அதிமுக கூட்டணி குறித்து பேசிய அவர் எங்களுடைய கூட்டணி தொடரும் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.