இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார்.

டெல்லி மெட்ரோ சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டர் என்று சொல்லப்படும் அறையில் இருந்து, ரயில் எப்போது புறப்பட வேண்டும், எங்கே எப்போது நிற்க வேண்டும், எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். நவீன சிக்னல் முறை இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே தானியங்கி மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

image

“பிங்க் லைன்” என்று அழைக்கப்படும் கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன. ஏழாம் எண் வழித்தடத்தில் முதல் கட்டமாக இந்த சேவை தொடங்கப்படும் என டெல்லி மெட்ரோ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பின் பிற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.