எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து வரும் அரவிந்த் சாமியின் புதிய லுக் நாளை வெளியாக உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். திரைப்பட நடிகையாக தனது வாழ்கையைத் தொடங்கிய ஜெயலலிதா பின்னாளில் தமிழகத்தின் மிகவும் கவனிக்கத்தக்க ஆளுமையாக உருவெடுத்தார். சறுக்கல்களும், சாதனைகளும் நிரம்பிய அவரது வாழ்கை வரலாற்றை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்கையை வெப் சீரிஸாக எடுத்தார்.
அந்த வரிசையில், இயக்குநர் ஏ.எல்.விஜயும் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் அண்மையில் அரவிந்த் சாமி, இறுதிநாள் படப்பிடிப்பில் இருந்து புகைப்படத்தை பதிவிட்டார்.
We will be releasing my new look from Thalaivi tomorrow morning at 10.00 AM on the occasion of the Death Anniversary of Puratchi Thalaivar MGR. Directed by A.L. Vijay; Produced by @vishinduri @ShaaileshRSingh#Thalaivi #MGR #ArvindSwamiasMGR @KanganaTeam pic.twitter.com/ibwXZafBZd
— arvind swami (@thearvindswami) December 23, 2020
இந்நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை அனுசரிக்கப்படும் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து தன்னுடைய புதிய லுக் ஒன்று வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டதாவது, “ நாளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, தலைவி படத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு என்னுடைய புதிய லுக் வெளியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.