புதிய வகை கொரோனா வைரஸ்:
இங்கிலாந்து நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அரசு, கிறிஸ்துமஸ் ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை நிறுத்திவைத்து, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. உலகின் பல நாடுகள், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன.
இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சூழலில், மீண்டும் கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளது.