சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தினசரி அனுமதிக்கப்படுகின்றனர்.

image

இந்த நிலையில், கூடுதல் பக்தர்களை அனுமதிக்கக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம், தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.