சென்னையை அடுத்த செம்மஞ்சேரி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த நபர், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் குடி போதையில் அவரது வீட்டருகே வசித்து வந்த பானுமதி என்ற மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அவர் மீது கற்களை வீசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பானுமதி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சதீஷ் குமாரை தேடி வந்த காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து அவர் செம்மஞ்சேரி காவல்நிலையத்திற்கு மது அருந்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் ஐயப்பன் சதீஷை நாளை வரும் படி கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சாலைக்கு வந்த சதீஷ் குமார் பிராட்வேயிலிருந்து செம்மஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையார் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் சதீஷ் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இது பார்ப்பதற்கே பதறவைக்கும் வகையில் உள்ளது.
<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/XAlq0NLl7_Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>