கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான யு.ஏ.காதர் உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் காலமானார். அவருக்கு வயது 85.

மியான்மரைச் சேர்ந்த காதர், 2-வது உலகப் போரின் போது, கேரளாவில் குடியேறினார். சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை என எழுத்தில் பன்முகம் கொண்ட காதர், சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது படைப்புகள் தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

image

காதரின் உடல் இன்று கோழிக்கோடு டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.