புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கொடும்பாளூர் அருகே வடகாட்டுப்பட்டியில் உள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக கவிழ்ந்த விபத்தில் காரில் சென்ற 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மதுரையைச் சேர்ந்த பைசல், ரிசாத் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர் மதுரையைச் சேர்ந்த முகமது சபியுல்லா என்பதும் இவர்கள் நான்கு பேரும் திருச்சியில் உள்ள கே.கே நகர் பகுதிக்கு சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

image

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.