குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 இல் நடைபெறும் என்று பிசிசிஐ செயாலளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஜெய் ஷா ” இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும். பின்பு அகமதாபாத்தில் இருக்கும் மொடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 இல் பகலிரவு போட்டியாக நடைபெறும். இதில் 5 டி20 போட்டிகளும் மொடேரா மைதானத்தில் நடைபெறும்” என்றார் ஜெய் ஷா.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. மேலும் இரு அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகளும் நடைபெறும். மிக முக்கியமாக 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என்று ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.