எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் தொடருவதை நிறுத்தவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின்மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தரப்பிலும், அமைச்சராக இருந்த உதயகுமார் தரப்பிலும், அரசு தரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகள் அவை. 3 வழக்குகள் ஏற்கெனவே அரசாணையில் ரத்து செய்யப்பட்டது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதேசமயம் அமைச்சர் உதயகுமார் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்துள்ளார்.

குறிப்பாக ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுப்பது தொடர்பாகவும், சென்னை பெருவெள்ளத்திற்கு அமைச்சர் உதயகுமார் பதவி வகித்த துறையே காரணமாக இருந்ததாகவும் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்ததாகவும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது திமுக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் குமரேசன், இவை அவதூறு பரப்பும் அல்லது தண்டிக்கக்கூடிய குற்றங்கள் கிடையாது. ஒரு அரசியல் கட்சித்தலைவர் என்ற முறையில் ஒரு விமர்சனத்தைத்தான் முன்வைத்ததாகவும் கூறி வாதித்தார்.

image

அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இந்த 12 வழக்குகள் தவிர மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும், அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், எனவே அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் வாதத்தை முன்வைத்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி 4 வழக்குகளை ரத்து செய்ததுடன், மற்ற 8 வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவதூறு வழக்கு தொடருவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்றும், இந்த கலாசாரம் ஒழிக்கப்படவேண்டும் என்றும், பிரதான கட்சிகள் இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு ஆதாரமில்லாத, வலுவில்லாத வழக்குகள் தொடருவதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.