மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே கர்ப்பிணிபோல் நடித்து நூதனமான முறையில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

image

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று விசாரணை செய்தபோது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் அங்கும் இங்குமாக சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்ததை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது அந்த பெண் கஞ்சாவை பொட்டலமாக மடித்து வயிற்றில் மறைத்து வைத்து கர்ப்பமாக இருப்பதுபோல் வேடமணிந்து நூதனமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

image

மேலும் போலீசார் விசாரணையில் அப்பெண் கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த ராணி என்பதும் இவர் தொடர்ந்து அப்பகுதியில் நூதனமான முறையில் கர்ப்பிணிபோல் வயிற்றில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ராணியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவையும் ரூ.400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.