மொரப்பூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சார்ந்த குமரன் என்பவர் ஓசூர் பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். குமரன், தனது சொந்த ஊரை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த ஓராண்டாக அடிக்கடி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

image

இந்நிலையில் தற்போது சிறிய கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குமரனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால் குமரன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் குமரன் மீது, சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து குமரனை மொரப்பூர் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.