வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 5-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி புராரி மைதானத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து டெல்லியை சுற்றியுள்ள முக்கியமான 5 மாநிலங்களின் எல்லைகளை போலீசார் சீல் வைத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

உணவு, குடிநீருடன் போராட்டக் களத்திற்கு வந்துள்ள விவசாயிகள் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.