இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரை முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்தப் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.
Timing them to perfection! ??#TeamIndia skipper @imVkohli getting batting ready ahead of the first ODI against Australia ??? #AUSvIND pic.twitter.com/lG1EPoHVKK
— BCCI (@BCCI) November 26, 2020
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட கடந்த சுற்றுப்பயணத்தில் அதிரடி வெற்றிகள் பெற்று தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 2019-20-ஆம் ஆண்டு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணி 2018-19 -ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 5 தொடர்களில், இந்திய அணி 3 முறையும் ஆஸ்திரேலிய அணி 2 முறையும் வென்றுள்ளன.