காஞ்சிபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் மதிப்புள்ள நெற்பயிர்கள் நீரில் முழுகி முற்றிலும் சேதமடைந்தது.

நிவர் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

image

காஞ்சிபுரம் அடுத்த உள்ள வேளி யூர், கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்களில் பயிர் வைத்த இடமே தெரியாமல் முழுவதுமாக மூழ்கி அனைத்தும் வீணாகி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர்கள் நன்றாக வளர்ந்து இருந்ததாகவும் லாபம் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த திடீர் மழை பெய்ததால் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.