எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான துணை தேர்வுகளை விரைவாக நடத்தும்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அமைப்புகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த மிக முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

மருத்துவப் படிப்பை பயிலும் மாணவர்கள் அடுத்தடுத்த வருடங்களுக்கு செல்வதற்கு இந்த தேர்வுகள் மிகவும் அவசியம் என்பதால் அதனை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.