விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 2,300 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 90 சதவிகித பட்டாசுகள் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

image

இந்நிலையில், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.