விராட் கோலியின் உணர்வை நாம் மதிக்க வேண்டும் என ஆஸி கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருப்பார்.

image

டெஸ்ட் தொடரில் முதல் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்ப உள்ளார். ரோஹித் சர்மா மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அனுஷ்காவின் பிரசவத்தின் போது அவருடன் நாட்களை செலவிட விரும்புவதால் தந்தைவழி விடுமுறைக்கு விராட் கோலி பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியுள்ளார். இதனை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் கோலியில் பிரசவகால விடுப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாகி நிக் ஹோக்லே கூறுகையில், “விராட் கோலி தனது முதல் குழந்தை பிறக்கையில் அவர் அங்கு இருக்க வேண்டும் என நினைக்கும் உணர்வை நாம் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா ஆஸ்திரேலியா விளையாட்டின் போது மைதானங்களில் ரசிகர்களை கூட்டுவதற்கான செயல்பாடுகளையும் ஆராய்ந்து வருகிறோம். பாதுகாப்பையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.