ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞருக்கு உதவ ட்விட்டரில் ரூ.5 லட்சம் நிதி திரட்டிய தருமபுரி எம்பி செந்தில்குமார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கடந்த 5-ம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராமநாதபுரம் மாவடம் சாயல்குடியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்ற இளைஞர், ஒரு ரயில் விபத்தில் இரு கால்களை இழந்துவிட்டதாகவும், அந்த இளைஞரின் தந்தை சமீபத்தில் காலமாகி விட்டதாகவும், எனவே முத்தமிழுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 புரோஸ்டெடிக் செயற்கைக் கால்கள் பெற உதவுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.      

அதன்படி #Prosthesishelp ஹேஷ்டேக்கை அனுப்புவோருக்கு அவர் வங்கி விவரங்களை அனுப்புகிறேன் என செந்தில்குமார் தெரிவித்திருந்தார். அவரின் வேண்டுகோள்படி பலரும் வங்கி விவரங்களை பெற்று நிதயுதவி அளித்து வந்தனர்.

இந்நிலையில், முத்தமிழ் செல்வனுக்கு உதவ ரூ.5 லட்சம் என்ற இலக்கை இரண்டரை நாட்களுக்குள் எட்டியுள்ளதாக செந்தில்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘உங்கள் ஆதரவும் உதவியும் இல்லாமல் சாத்தியமில்லை. ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.