மதுரை அலங்காநல்லூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டாஸ்மாக் கடை வேண்டும் என மது குடிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

image

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், மேட்டுபட்டி அருகே திறக்க இருந்த புதிய டாஸ்மாக் கடைத்திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அந்த இடத்திற்கு வந்த மதுக்குடிப்போர் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்கப்படமால் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.