அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

image

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினியம் தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினிய அச்சுகளை திருடிய வழக்கில் ஆவடியை சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ் மற்றும் அம்பத்தூரை சேர்ந்த பாபு மற்றும் 17வயது சிறுவன் உட்பட 5 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து ரு. 80 ஆயிரம் பணம், 60 அலுமினிய அச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

image

இந்த நிலையில் சிறுவன் மட்டும் நீதிமன்ற ஜாமீனில் வெளியான அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்த நான்கு பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், பாபு ஆகிய நான்கு பேரும் காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றனர். காவல் நிலையத்திலிருந்து திருடர்கள் 4பேர் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.