இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங்கில் டெப்த் இல்லாதது தான் சிக்கலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் பெங்களூர் அணி எலிமினேட்டரில் விளையாட உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பதான் இதனை தெரிவித்துள்ளார். 

“பெங்களூர் அணி டாப் ஆர்டரில் நான்கு தரமான முழு நேர பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. கோலியும், டிவில்லியர்ஸும் மூன்று மற்றும் நான்காவது பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவது தான் பலம். ஆனால் அதற்கு பிறகு இறங்கும் பேட்ஸ்மேன்கள் ஆல் ரவுண்டர்களாக இருப்பது தான் சிக்கல். 

image

கூடுதலாக ஒரே ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்து பேட்டிங் ஆர்டரை பேலன்ஸ் செய்தால் கடந்த சில போட்டிகளாக சந்தித்து வரும் பெங்களூர் அணி வெற்றி பாதைக்கு திரும்பலாம். 

image

அதே நேரத்தில் ஹைதராபாத் அணி இந்த சீசனில் திறம்பட செயல்பட்டுள்ளது. அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும். எனக்கு தெரிந்து எலிமினேட்டரில் பெங்களூர் அணி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கிறேன்” என பதான் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.