ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவர் சைபுல்லா மிர் இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரங்கிரெத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்

image

ஹிஸ்புல் முஜாஹிதீனின் செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் சைபுல்லா மிர் இன்று பிற்பகல் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரங்கிரெத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். இவரது கூட்டாளிகளில் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர், காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 2014 இல், டாக்டர் சைபுல்லா மிர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். பாதுகாப்பு படையினருடனான மோதலில் ரியாஸ் நாய்கூ கொல்லப்பட்ட பின்னர் இவ்வாண்டு மே மாதத்தில் அவர் புதிய ஹிஸ்புல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹிஸ்புல் முஜாஹிதீன் ஒரு பிரிவினைவாத போராளிக்குழு, இது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.