நீட் தேர்வு முடிவில் 590 மதிப்பெண்களுக்கு பதிலாக 6 மதிப்பெண்கள் காட்டியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 18 வயதான மாணவி விதி சூர்யவன்ஷி. இவர் மருத்துவராக வேண்டும் எனும் கனவில் கடினமான படித்து நடந்து முடிந்த நீட் தேர்வில் பங்கேற்றார்.
 
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தனது நீட் முடிவுகளைச் சரிபார்த்தபோது, தேர்வு முடிவில் தனக்கு 6 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
தனது மதிப்பெண்களால் ஏமாற்றமடைந்த விதி, செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நன்றாகப் படிக்கும் தனது மகள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றது குறித்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் விடைத்தாளை பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
 
இந்நிலையில் மாணவி விதியின் விடைத்தாளில் 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. தேர்வு முடிவில் வெளியான குளறுபடியால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.