இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

image

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.

சென்னையில் அக்டோபரில் கொரோனா பாதிப்பு குறைவு

ஒட்டகச்சிவிங்கியிடம் உதைப்பட்டு பயத்தில் ஓட்டம் எடுக்கும் காண்டாமிருகம்: வைரல் வீடியோ

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.