ஐபிஎல் தொடரில் முதல் முறையாக லீக் சுற்றோடு நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து சென்னை வெளியேறுவது உறுதியாகியுள்ளது. 

image

இந்நிலையில் இந்த சீசனில் தோனி அவரது பழைய ஆட்டத்தை ஆடியிருக்க வேண்டும் என தெரிவித்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

image

“பல பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட்டாகி ரன் சேர்க்க தடுமாறுவதை நான் பார்த்துள்ளேன். அதிலிருந்து மீண்டு வர அதிரடியாக பந்தை அடித்து விளையாட வேண்டும். தோனியும் இந்த சீசனில் அவரது பழைய அதிரடி ஆட்டத்தை ஆடியிருக்க வேண்டும். பழைய தோனி பந்தை எந்தவித பயமுமின்றி அடித்து நொறுக்குவார். அப்படி தான் அவரது அணுகுமுறை இந்த சீசனில் இருந்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சென்னையின் ஆடும் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.