ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இப்போது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 2 ஆம் வாரத்தில் தொடங்குகிறது. இந்தாண்டு தொடரில் வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற இந்திய வீரர்களை அணுக பிக் பாஷ் முடிவு செய்துள்ளது.

image

இதில் மூன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை அணுக பிபிஎல் முடிவு செயதுள்ளது. அதன்படி தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கை பிபிஎல் தொடரில் விளையாட வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் தோனியும், ரெய்னாவும் ஆகஸ்ட் மாதம் தங்களுடைய ஓய்வை அறிவித்தனர். இதில் யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப்பெற்றார்.

image

யுவராஜ் சிங்கை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஷ் போட்டியில் பங்கேற்க அனுமதியளித்தது. ஆனால் யுவராஜ் சிங்குக்கு பிசிசிஐ தடையில்லா சான்றிதழை வழங்கவில்லை. இதனையடுத்து அவரும் அந்தாண்டு நடைபெற்ற பிக் பாஷ் தொடரில் பங்கேற்கவில்லை. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.