மதத்தின் பெயரால் பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.
மனு தர்மத்தில் பெண்கள் குறித்து கூறப்பட்டிருந்ததாக திருமாவளவன் பேசிய வீடியோ க்ளிப் ஒன்று ட்விட்டரில் வைரல் ஆக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மதத்தின் அடிப்படையில் பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அத்துடன் பெண்கள் குறித்து தவறுதலாக பேசிய திருமாவளவனை கூட்டணிக்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஏன் கண்டிக்கவில்லை ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.