காதல் திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தனது மனைவியை இன்று ஆஜர்படுத்துவதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார். 

image

கள்ளக்குறிச்சி தனித் தொகுதி எம்.எல்.ஏ பிரபுவுக்கும், தியாகதுருகத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சுவாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் கடந்த திங்களன்று திருமணம் நடைபெற்றது. தனது மகளை ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டதாக சௌந்தர்யாவின் தந்தை குற்றம் சாட்டினார். நான் சௌந்தர்யாவை கடத்தவில்லை காதலித்துதான் மணம் முடித்தேன் என்று எம்எல்ஏ பிரபு விளக்கமளித்தார். 

image

இது காதலா, கடத்தலா என்ற விமர்சனம் எழுந்த நிலையில், எம்.எல்.ஏ பிரபு தனது மகளை கடத்திச் சென்றதாகவும், அவரை மீட்கக் கோரியும் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

image  
நீதிமன்றம் விசாரிக்கும்பட்சத்தில் தன்னுடைய மனக்குமுறலை கூறுவேன் எனவும், திட்டம் போட்டு தனது மகளை எம்.எல்.ஏ. பிரபு, திருமணம் செய்ததாகவும் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் கூறினார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய எம்.எல்.ஏ பிரபு, நீதிமன்ற உத்தரவுப்படி தனது மனைவி சௌந்தர்யாவை ஆஜர்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.