அரசாங்கம் வாளோடு நின்றாலும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ. பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தபிரதேச மாநிலம் ஹத்ராசில் விவசாய வேலைக்காக சென்ற 19 வயதான பட்டியலின இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்‌டார். பின்னர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து அந்த பெண்ணின் உடலை கொண்டு சென்ற காவல்துறையினர், பெற்றோர் ஒப்புதலின்றி அவசர அவசரமாக தகனம் செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

image

இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசாங்கம் வாளோடு நின்றாலும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ. பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

image

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உத்தரபிரதேசம் பாய்ரியா தொகுதி எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், அரசாங்கம் வாளோடு நின்றாலும் இதுபோன்ற சம்வங்களை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நற்பண்புகள், பாரம்பரிய சடங்குகளையும் கற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.