தரமணியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

image

 சென்னை தரமணியில் நேற்று மாலை, தரமணி போலீசார், 100 அடி சாலை, பொம்மி துணிக்கடை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகத்தின் பேரில், அவர்கள் வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்த தரமணியை சேர்ந்த செல்வம் (எ) சப்பை செல்வம் (44), மணலியை சேர்ந்த மணிவண்ணன் (45), ரகுநாதன் (58), ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். 

image

அவர்களிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடந்தி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், பணம் ரூ.2,600, 3செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்றவாளிகள் செல்வம் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்து, சிறையில் இருந்து வெளியே வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.