இன்று மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மோடி அரசைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

அவர் பேசியபோது, ‘’இயக்கத்திற்காக யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம். தமிழக மக்களுக்காக எதை எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். கட்சியில் யார் யார் தவறு செய்கிறார்களோ அவர்களை பக்கத்தில் வைக்காமல் விரட்டிவிடுவோம். திமுகவின் ரவுடிசத்தை நாம் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மிரட்டும் கட்சி, ஆட்சி யாருடையது என்பது உங்களுக்கேத் தெரியும். அதிமுக ஆட்சியில் மதுரையின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. 

இன்றைய திரைப்படங்கள் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள்.அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவானார்கள்.தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அன்றைய திரைப்படங்கள் தான் உதவின.

“ஆதாரத்துடன் நிரூபித்தால் எதையும் சந்திக்க தயார்”-ஸ்டாலினுக்கு காமராஜ் பதிலடி 

மேலும் மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக உள்ளது. மோடியின் திட்டங்களையெல்லாம் நாங்கள் ஆதரித்துக் கொண்டுள்ளோம். மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறோம். மோடியே பாராட்டிய மிகச்சிறந்த நிர்வாகத்தை எடப்பாடி அரசு அளித்துவருகிறது’’ எனப் பாராட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.