இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. 20 இந்திய வீரர்கள் வீர மரணமும் அடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து பதிலடி என்று சீன செயலிகளை தடை செய்தது மத்திய அரசு. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று லடாக்கின் பாங்கோங் ஏரி அருகே நடந்தது.
அந்தக் கூட்டத்தில்தான் “இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை அனுப்புவதை நிறுத்தச் சொல்லப்பட்டுள்ளது. நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுப்பதை தவிர்க்கவும ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று சீன பாதுகாப்புத்துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.