விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் விவசாய மசோதாக்கள் நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ராஜ்யசபா டிவி, சத்தமில்லாமல் வெறும் காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பியது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.
இந்த விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பதை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து ஆவேசமாக குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
#FarmBills | Rajya Sabha TV mutes the audio telecast of the proceedings as protests continue#AgricultureBill #farmersbill #farmersbill pic.twitter.com/0HguPrKYEP
— CNBC-TV18 (@CNBCTV18Live) September 20, 2020