சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அமித்ஷா, கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டார். அதன்பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.