ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையாவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் RTI மூலம் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. மேலும் அபாரதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் அவர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி விடுதலையாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது