வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ராகுலுடன் சோனியா காந்தி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் செல்வது தாமதமாகி வந்த நிலையில், நேற்று அமெரிக்கா புறப்பட்டார். டெல்லியிலிருந்து நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற சோனியா காந்தி இம்மாத இறுதி வாரத்தில்தான் நாடு திரும்புவார் என்றும், ராகுல்காந்தியும் உடன் சென்றுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், கூட்டத் தொடர் பாதிப்பகுதி முடிந்தபின் சோனியா காந்தி திரும்புவார் என்றும், ராகுல் காந்தி ஒரு வாரத்தில் இந்தியா திரும்பிவிடுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.