சிஎஸ்கேவின் அடுத்தக் கேப்டன் குறித்து சிஎஸ்கே வீரர் ப்ராவோ பேசியுள்ளார்.

கொரோனாவால் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு நடைபெறுமா ? என்ற நிலைக்கு சென்றது. இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை, குறிப்பாக தோனியின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. ஏனென்றால் தோனி ஐபிஎல் ஆடுவார், பின்னர் டி20 உலகக் கோப்பையில் ஆடுவார் என ரசிகர்கள் கனவுக் கோட்டை கட்டி வைத்திருந்தனர். ஆனால் ஐபிஎல் தேதி அறிவிக்கப்பட்டபாடில்லை.

image

பின்னர் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகம்) ஐபிஎல் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல் பிசிசிஐ தரப்பால் உறுதியும் செய்யப்பட்டது. அதற்குள் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தோனி தனது ஓய்வையே அறிவித்துவிட்டார். இந்நிலையில் வரவிருக்கிற ஐபிஎல் போட்டியில்தான் தோனி களம் இறங்கவுள்ளார்.

ஆனாலும் ஐபில் தொடரிலும் தோனி எவ்வளவு காலம் நீடிப்பார் என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னை நிர்வாகம், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கண்டிப்பாக தோனி இருப்பார் எனக் கூறியுள்ள நிலையில் அதற்கு அடுத்த முடிவை தோனியே எடுப்பார் என தெரிகிறது.

image

இந்நிலையில் சிஎஸ்கேவின் அடுத்தக் கேப்டன் குறித்து சிஎஸ்கே வீரர் ப்ராவோ பேசியுள்ளார். சிஎஸ்கேவின் அடுத்த தலைமை குறித்து தோனியின் மனதில் நிச்சயம் முடிவு இருக்கும். எல்லாருமே ஒருநாள் விலகும் நேரம் வரும். அப்படி விலகும் நேரம் தோனி தன்னுடைய பொறுப்பை ரெய்னாவுக்கோ அல்லது இளம் வீரர் ஒருவரிடமோ ஒப்படைப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் சிஎஸ்கேவின் ரசிகர்கள் தான் அணிக்கு பக்கபலம். அவர்களின் தொடர் ஊக்கம் தான் அணியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.